கண்மூடித்தனமாக அறிவியலை நம்பலாமா? – எதார்த்தவாதிகளே உஷார்!

19 09 2008

கடவுள் துகள் உட்பட விபரீத ஆரய்ச்சிகளை வரவேற்கும் அறிவியல் விரும்பிகளுக்கும், உணமையை அறிந்துகொள்ள விரும்பும் எதார்த்தவாதிகளுக்கும் ஏன் அறிவியலை கேள்வி கேட்க கூடாது? என்ற பதிவிற்கு திரு. கையேடு அவர்கள் அளித்த பின்னூட்ட கேள்விகளின் அடிப்படையில் சில விடயங்களை தெளிவுபடுத்துகிறோம்.

//காலசூழலை மெல்ல தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் உயிர்களுக்கு இருக்கிறது, மனிதனுக்கு இன்னும் இருக்கிறதா?//

அதை தான் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துவிட்டு, செயற்கை தகவமைப்புகளை உருவாக்கிக்கொண்டு இயற்கையோடு பலப்பரீட்சை பார்த்துக்கொண்டு இருக்கிறோமே.

இன்று எயிட்ஸ் நோய் தான் மனித குலத்துக்கு மிகப்பெரிய சவால். அந்த நோய்கிருமியை கூட தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் நாளடைவில் மனிதனுக்கு சாத்தியப்படலாம்.

// இது உங்கள் அனுமானமே, இவ்வனுமானத்துடன் விஞ்ஞானம் நிச்சயம் கைகட்டி உட்கார்ந்துவிடவில்லை.தொடர்ந்து அந்தப் பாதையில் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறது.//

// ஒருவேளை உங்கள் கூற்றுப் படி நிகழ வாய்ப்பிருந்தாலும், உயிர்களுக்கான தகவமைப்புகள் பெரும்பாலும் பல தலைமுறைகள் ஆகும்.//

இப்படி நோய்களுக்கான மருந்து கண்டுபிடிக்கும் அறிவியலின் உழைப்பை தேவையில்லை என்றோ வேண்டாம் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால் புதிய கிருமிகளை உருவாக்கிப்பரப்பும் அறிவியலை தான் வேண்டாம் என்கிறோம்.

உதாரணமாக அமெரிக்காக உட்பட பல வல்லரசு நாடுகளில் இன்றுகூட நோய்கிருமி ஆயுத ஆராய்ச்சிகள்(விபரீத அறிவியல்) பகிரங்கமாக நடந்து கொண்டிருக்கிறது. இங்கு கவனிக்க வேண்டியது இதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் தொகையும் நோய்எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. இதற்கு உங்கள் கூற்றே சான்று. எல்லா நாடுகளும் ராணுவத்திற்கு அதிகம் பணம் ஒதுக்குவதாக நீஙக்ள் குறிப்பிடுவது.

// உங்கள் பார்வையில் பேராபத்து என்பதின் அளவென்ன?//

மனித உயிரையும், உயிரின சரித்திரத்தையும் பணையம் வைத்து ஆய்வுகள் செய்கிறார்களே அதை தான் பேராபத்து என்கிறோம். உதாரணமாக தற்போதைய கடவுள் துகள் ஆய்வு, அணுஆயுது ஆய்வு மற்றும் சேகரிப்பு, நோய்கிருமி ஆயுதங்கள் மற்றும் கண்டுபிடிப்பு சேகரிப்புகள், போன்றவை.

பேராபத்தின் அளவு என்ன என கேட்டால் மனிதனால் எதிர்கொள்ள முடியாத ஆபத்துகள் அனைத்துமே பேராபத்துகள் தான்.

//அனுபவித்த பேராபத்துக்களைப் பற்றி முன்கூட்டுயே அறிந்து கொண்டு மனித குலத்தைத் தற்காத்துக் கொள்ளும் அளவிற்கு விஞ்ஞானம் நிச்சயமாக திறனுடையதே.//

இயற்கையான பேராபத்துக்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதிலிருந்து தப்பித்து ஓடவே இத்தனை காலம் பிடித்திருக்கிறது என்றால் இன்று அறிவியல் படைத்துவைத்துள்ள பேராபத்துகளை எப்படி எதிர்கொள்ள போகிறோம்? எங்கே தப்பித்து ஓடப்போகிறோம்?

உதாரணமாக முன்பெல்லாம் போர் என்றால் எல்லையில் ராணுவம் மட்டுமே மோதிக்கொள்ளும். நாம் நம்வீட்டில் பாதுகாப்பாக இருந்து நிதி உதவி மட்டும் செய்தால் போதும். ஆனால் அணுஆயுதம் மற்றும் கிருமிஆயுதம், பூமியில் சூரியனில் உள்ள அளவு போன்ற வெப்பத்தை ஏற்படுத்துதல்(இது இயலுமா என்பது சர்சசைக்கு உரியது. ஆனால் அதை சாதிக்கப்போகறேன் என்ற ஆய்வில் உயிரின சரித்திரமே முடிந்துவிட்டாலோ?) இப்படி பேராபத்துகள் வருகிறது என தெரிந்தால் எங்கே தப்பித்து ஓடுவீர்கள்? அதற்காக தான் நிலவில் பிளாட் வாங்கி வைத்திருக்கிறாகளா?

நாங்கள் வலியுருத்துவது இயற்கை சீற்றங்களுக்கு தற்காப்பு கண்டுபிடிப்பதை எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் கண்டுபிடிப்புகளே இயற்கையை மிஞ்சும் பேராபத்துகள் ஆகிவிடக்கூடாது. மேலும் அதற்காக பசிபட்டினியில் மனிதகுல்ம் உள்ள தற்போதைய நிலையில் பணத்தை வீணடிக்க கூடாது என்பது தான்.

// உலகெங்கிலும் இராணுவத்திற்காகச் செலவிடப்படும் பணம் பலமடங்கு அதிகம்.//

100 % உண்மை தான். இது குறித்து அறிவகம் கட்டுரை தொடரில் விரிவாக எழுதியுள்ளேன். இங்கு கவனிக்க வேண்டியது நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்திற்கு ஒதுக்கும் நிதியில் பெருபாண்மை நிதி ராணுவ வீரர்களின் நலனுக்கோ, பயிற்சிக்கோ, மருத்துவம் சுகாதாரத்திற்கோ ஒதுக்கப்படுவது இல்லை. பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்புக்கும், அதை பதுக்கி பாதுகாத்து வைப்பதற்கும் தான் செலவிடப்படுகிறது. உடனே அரசியலை கேள்வி கேளுங்கள் என்காதீர்கள். இந்த கண்டுடிபிடிப்புகளை எல்லாம நிகழ்த்துவது அறிவியலாளர்கள் தானே.

இந்தியா உட்பட பல ஏழை நாடுகளில் ராணுவத்திற்கு அதிக நிதியை ஒதுக்கும் இனனொரு மர்மத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். வேறு எந்த துறையில் இருந்தும் நிதியை கொள்ளையடித்தால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்றாவது ஒருநாள் பதில்சொல்லியே ஆகவேண்டும். ஆனால் ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடித்துவிடலாம். மக்கள் கோட்டால் ஒரே பதில் ராணுவ ரகசியம் வெளியில் சொன்னால் நாட்டிற்கு ஆபத்தாம்.

// பூவி வெடித்துவிடும் என்றால் அதற்குமேல் எதிர்கொள்ள ஒன்றுமேயில்லை. எதை? எங்கிருந்து எதிர்கொள்வது? 🙂

மேற்குலக விஞ்ஞானத்திற்கு தனது வளர்ச்சியின் திசையின் எல்லை எது எங்கு நிறுத்துவது என்ற குழப்பம் என்றால், இந்தியாவிற்கு தற்போது எந்ததிசையில் செல்வது என்பதிலேயே குழப்பம் இருக்கிறது //

மிக சரியாக அருமையாக சொல்லியுள்ளீர்கள். இங்கு தங்களுக்கு சாதகமான பதிலுக்கு மட்டும் பாராட்டுகிரீகள் என்ற எண்ணம் வரக்கூடாது. உண்மையை யார் எங்கு, எப்படி சொன்னாலும் ஏற்றுக்கொள்வது தான் அறிவுடமை. அதில் எதற்கு வாத பிடிவாதம் வேண்டும். வாதத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் விவாதிக்கலாம். ஆனால் இறுதியில் உண்மையில் ஒன்றுபடுவது தான் அறிவுடமை. அந்த விடயத்தில் மேற்சொன்ன உங்கள் கருத்துண்மையுடன் நாங்கள் உடன்படுகிறோம்.

// அறிவியலை எதிர்ப்பதற்காக (அல்லது தங்கள் பார்வையில் தேவையற்ற அறிவியலை எதிர்பதற்காக), ஏழ்மை, பசி என்றெல்லாம் பேசவேண்டியதில்லை. ஒரு ஏழை ஏழையாக இருப்பதற்கு அறிவியல் காரணமல்ல.//

அன்பரே இங்கு தான நீங்கள் ஒன்றை முதலில் புரிந்து கொள்வேண்டும். இந்த அறிவியலுக்கான நிதி எங்கிருந்து வந்தது? நீங்களும் நானும் கடையில் வாங்கும் அதே உணவு மற்றும் அத்தியாவிச பொருட்களை தான் ஒரு வேளை சோற்றுக்குகூட வழியில்லாத ஏழைகளும் வாங்குகிறார்கள். அப்போது பொருளில் வரி, லாபம் உட்பட அனைத்திற்கும் சேர்த்து தான் விலை கொடுக்கிறோம்.

பணக்காரனுக்கு தான் பேனா 10 ரூபாய் ஏழைக்கு 5 ரூபாய் என்றா கடையில் விற்கிறார்கள். இங்கு ரேஷன் கடைகளை பற்றி குறிப்பிட முன்வரலாம். எல்லா நாடிலும் எல்லா மாநிலத்திலும் ரேசன் கடைகளில் எல்லா அடிப்படை பொருட்களும் கிடைக்கிறதா? ரேச்ன பொருட்களை வைத்து மட்டும் ஏழை உணவு உண்டுவிடமுடியுமா?

ஏழையும் பணக்காரணும் சேர்ந்து தானே அரசுக்கு வரி செலுத்துகிறார்கள். அதுவும் சரிசமமாக. இங்கு பணக்காரர் வருமான வரி கட்டுகிறான் ஏழை கட்டுகிரானா? என கேட்கலாம். பணக்காரர் வருமான வரி கட்டுவதே ஏழைகளிடம் தங்கள் பொருட்களை விற்று பெற்ற வருமானத்தில் தானே. அவர்களுக்கு வருமானம் வரி கட்டும் அளவுக்கு பணம் எங்கிருந்து வந்தது?

பணக்காரர் வருமானவரியை நேரடியாக கட்டுகிறார்கள். ஏழைகள் பணக்காரரிடம் கொடுத்து கட்டுகிறார்கள் அவ்வளவே.

சரி இந்தியாவையே உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். இன்று பல அடிப்படை தேவைகளுக்கு நிதியில்லாத போது கடவுள் துகள் ஆராய்ச்சிக்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?

அதே போல ஆப்பிக்கநாடுகளின் ஏழைகளுக்கும். கடவுள் துகள், அணுஆயுதம் போன்ற விபரீத ஆய்வுகளுக்கும் என்ன சம்மந்தம் என தோன்றலாம். அதற்கு தான் தாரளமயமாக்கல், உலகமயமாக்கல், உலகவங்கியில் இருந்து கடன் கொடுத்தல், சர்வதேச ஒப்பந்தங்கள் என்ற பெயரில் அவர்கள் நிர்ணயித்த விலைக்கு பொருளை விற்று கொள்ளையடிக்கிறார்களே. அரசியல் என்ற மிகப்பெரிய வியாபாரத்தில் அறிவியலுக்கு மட்டும் நீதி நேர்மையுடனும், மனசாட்சியோடும் எதையும் எதிர்பார்க்காமல் நிதிஒதுக்கிவிடுவார்களா?

இது குறித்து தகுந்த ஆதாரங்களை சேகரித்து வருகிறேன். ஓரிரு தினத்தில் திரு. வடுவூர் குமார் அவர்களின் பின்னூட்டத்திற்கு பதிலாக இடுகிறேன்.

// இறுதியாக இதற்கெல்லாம் குற்றம் சாட்டவேண்டியது அறிவியலை அல்ல அரசியலை என்ற தங்களின் கேள்விக்கான பதில்//

விபரீத ஆராய்ச்சிகளுக்கான விடயத்தில் அரசியல்வாதிகள் அறிவியலாளர்களை வற்புறுத்துகிறார்களா? அல்லது அறிவியலாளர்கள் அரசியல்வாதிகளை ஏமாற்றுகிறார்களா? அல்லது கூட்டுகளாவாணிகளா?(திருடர்களா) என்பது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அரசியல்வாதிகள் வேண்டுமானால் வியாபாரிகளாக இருக்கலாம். ஆனால் அறிவியலாளர்கள் விபரீத ஆராய்ச்சிகளின் விளைவுகளை தெரியாதவர்களா? உலகின் எதார்த்த நிலையை தெரியாதவர்களா? அரசியல்வாதிகள் நிர்பந்தித்தால் எதைவேண்டுமானாலும் கண்டுபிடிப்பார்கள் என்றால் அவர்களிடம் எங்கே அறம் இருக்கிறது.

தங்கள் கண்டுபிடிப்புகள் தான் பெரிது என்று அரசியல்வாதிகளையே பணியவைத்து விபரீத ஆராய்ச்சிகளுக்கு நிதிபிடுங்குகிறார்கள் என்றால் யார் மிகப்பெரிய சுயநலவாதிகள்?

ஏன் அறிவியலை கேள்வி கேட்கக்கூடாது பதிப்பின் கருவே இது தான்

ஆன்மீகத்திற்குள் மதச்சாயல் வந்ததும் எப்படி கேள்விகேட்டீர்களோ, அதே கேள்வியை அறிவியல் மீதும் வையுங்கள் என்று தான் சொல்கிறோம்.

இன்னும் ஆக்கப்பூர்வமாக விவாதிப்போம்….


செயற்பாடுகள்

Information

பின்னூட்டமொன்றை இடுக