தமிழுக்கு திறன் இல்லை என்ற சொல்லும், தமிழீழக் கொடூரங்களை கேட்க நாதியில்லை என்ற உண்மையும் சென்ற வாரங்களில் என்னை வெகுவாக பாதித்த விடயங்கள்
இந்த இரண்டு அநீதிகளுக்காகவும் ஆயுதம் ஏந்தி போராட தமிழர்களை தயார் செய்வது தான் இந்த பதிவின் நோக்கம்.
முதலில் தமிழுக்கு இழைக்கப்படும் கொடுமையை பார்ப்போம்.
என் மகனுக்கு 2 வயது கடந்துவிட்டது. தமிழ் எழுத படிக்க கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன். உயிர் எழுத்துக்கள் 12. மெய் எழுத்துக்கள் 18. உயிர்மெய் எழுத்துக்கள் 216. ஆயுத எழுத்து 1., மொத்த எழுத்துக்கள் 247. இப்படி கற்றுக்கொடுக்கும் போது எதற்காக அம்மா இந்த ஆயுத எழுத்து என்றான் அறிவு. அப்போதைக்கு பதில் சொல்ல தெரியாத நான் தமிழை காப்பதற்காக என எதார்த்தமாக பதில் சொன்னேன். இனி கூடுதலாக ஸ,ஷ,ஜ,ஹ இந்த எழுத்துக்களை என்ன சொல்லி கற்றுக்கொடுப்பது?
தமிழில் சில எழுத்தக்கள் இல்லை அதனால் வடமொழியில் இருந்து கடன்வாங்கியது. இப்படி தான் தமிழ் சமுதாயம் எனக்கு கற்றுக்கொடுத்தது. இன்று தமிழகத்தில் பள்ளி பாடபுத்தகங்களில் இந்த நான்கு எழுத்துக்களை கற்றுக்கொடுப்பது இல்லை. சமுதாயத்திற்காக குழந்தைகள் மீதுள்ள பரிதாபத்தில் ஆசிரியர்கள் தான் சுயமாக கற்றுக்கொடுக்கிறார்கள்.
தமிழக அரசு இந்த நான்கு எழுத்துக்களை நீக்கவும் இல்லை, சேர்க்கவும் இல்லை. இதனால் இன்றுவரை தமிழ் ஒரு கடன்மாறி மொழியாகவே உள்ளது. நமது குழந்தைகளுக்கு மட்டுமல்ல தமிழ் கற்க விரும்பும் வேற்று மொழியினரிடமும் தமிழுக்கு திறன் இல்லை என்று தான் இநத நான்கு எழுத்துக்களுக்கான விளக்கத்தை தருகிறோம்.
உண்மையில் இந்த நான்கு எழுத்துக்கள் சமசுகிருத விரும்பிகளால் தமிழில் திணிக்கப்பட்டது என்பது தான் வரலாற்று உண்மை. தமிழ் இலக்கணத்திலோ, தமிழின் முதன்மை நூல்களிலோ இந்த நான்கு எழுத்துக்கள் இல்லை.
கொடுமை என்னவென்றால் தமிழை குறைகூறி வடமொழி எழுத்துக்களை திணித்தவர்கள் எளிதில் வெற்றிபெற்று விட்டார்கள். ஆனால் தமிழில் வடமொழி எழுத்துக்களை சேர்க்ககூடாது, நீக்கவேண்டும் என 2 ஆயிரம் ஆண்டுகளாக போராடுபவர்கள் இன்றுவரை இந்த தமிழ் சமுதாயத்திடம் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்.
தமிழர்கள் இந்த நான்கு எழுத்துக்களை தவிர இன்னபிற எழுத்துக்களை ஒதுக்கிவிட்டார்கள். ஆனாலும் இந்த நான்கு எழுத்துக்களை ஏன் ஒதுக்க மறுக்கிறார்கள்
1. பலரின் பெயர்களில் வருவது
2. உலக இணைப்பு மொழியாக அரங்கேரி வரும் ஆங்கிலத்துடன் தொடர்பை வைக்க இந்த நான்கு உச்சரிப்புகள் மிகமிக அவசியமாக இருப்பது.
3. பழகிவிட்டது
நியாயமான காரணங்கள் தான்.
இங்கு தமிழர்கள் ஒன்றை சிந்தித்தாக வேண்டும். இந்த நான்கு உச்சரிப்புகள் தேவை என்றால் அதற்கு நம்மீது திணிக்கப்பட்ட வடமொழி எழுத்துக்கள் தான் வேண்டும் என்றில்லை. தமிழ் எழுத்துக்களே அந்த உச்சரிப்பை தரும். நாம் தான் பயன்படுத்த தாழ்வுமனபான்மை கொண்டுள்ளோம்.
இந்த நான்கு உச்சரிப்புகளுக்கு மட்டுமல்ல ஓராயிரம் உச்சரிப்புகளையும் ஒலிக்க தமிழில் எழுத்து இருக்கிறது. இந்த தனிச்சிறப்பு தான் தமிழை உலக செம்மொழிகளில் இருந்து தனித்து காட்டுகிறது.
தமிழை எந்த சூழலிலும் காக்க தான் அதற்கு ஆயுத எழுத்து வழங்கப்பட்டிருக்கிறது.
ஆயுத எழுத்து உயிர், மெய், உயர்மெய் எழுத்துக்களுக்கு பொதுவானதாக இருப்பதோடு தமிழை காக்கும் ஆயுதமாகவும் இருக்கும் என்பது எனது எண்ணம்.
இன்று சிலர் கட்டாயம் தேவைப்படுவதாக கூறும் நான்கு உச்சரிப்புகளுக்கான தமிழ் எழுத்தை பார்க்கலாம்.
ச-ஸ, சா-ஸா, சி-ஸி, சீ-ஸீ, சு-ஸ§, சூ-ஸ¨, செ-ஸெ, சே- ஸே, சை-ஸை, சொ-ஸொ, சோ-ஸோ, சௌ-ஸெள, ஃச்-ஸ்
இந்த வரிசையில் ஸ் என்ற எழுத்தை தவிர பிற எழுத்துக்கள் எல்லாம் ஒரே உச்சரிப்பை தருகிறது. ச்(ஸ்) என்ற மெய் உச்சரிப்பு ஆயுதத்துடன் சேரும் போது ஃச், ஃசு என்பது சாத்தியப்படுகிறது.
ஸ் என்ற எழுத்தை தவிர நாம் பிறதை பயன்படுத்துவதில்லை.
உதாரணத்துக்கு காங்கிரஸ் என எழுத்தும்போது தான் ஸ் பயன்படுத்துகிறோம். காங்கிரசார், காங்கிரசிடம், காங்கிரசுடன், என்று தான் பயன்படுத்துகிறோம்.
ஒரு ஒலிக்காக தனி ஒரு எழுத்துவரியையே ஏற்பதற்கு பதிலாக ஸ் - ஃசு என்று ஆயுதத்தை பயன்படுத்தலாமே.
ஃ இதற்கு க் என்பதல்ல ஒலி. எந்த எழுத்துடன் சேருகிறதோ அங்கு அந்த எழுத்தை மெல்லெலுத்தாக மாற்றி ஒலிக்கசெய்வது.
உதாரணமாக: ஃபோட்டான் என்பதை க்போட்டான் என நாம் வாசிப்பதில்லை. அதாவது பகரத்தின் மெல்லொலியை (fa.) உச்சரிக்கிறோம். அதே போல ஃசிடாலின், ஃசிட்ரான்சியம், என தெளிவாகவே உச்சரிக்கலாமே.
அடுத்து ஷ
ஷ-ஃச, ஷா-ஃசா, ஷி-ஃசி, ஷீ-ஃசீ, ஷ§-ஃசு, ஷ¨ - ஃசூ, ஷெ-ஃசெ, ஷே-ஃசே, ஷை-ஃசை, ஷொ-ஃசொ, ஷோ-ஃசோ, ஷைள-ஃசௌ, ஷ்-ஃச்
எல்லா உச்சரிப்பும் எளிதாகவே வருகிறதல்லவா? மேலும் ஷ என்ற உச்சரிப்பு மொழிக்கு இடையிலும் இறுதியிலும் வரும்போது ட வாக தமிழில் பயன்படுத்தி வருகிறோம். அதை அப்படியே எடுத்துக்கொள்ளலாம். எ.கா: இலட்சுமி, நட்டம், விடம்.
அடுத்து ஜ
இந்த உச்சரிப்புக்கு பதிலாக ச என்ற நேரடி உச்சரிப்பையே பயன்படுத்திவருகிறோம்.
இல்லை ஜ உச்சரிப்பு தான் வேண்டும் என பிடிவாதம் பிடிப்பவர்கள் ஞ்+ச பயன்படுத்தலாமே
ஞ்சா, ஞ்சி, ஞ்சூ, ஞ்செ என பயன்படுத்தலாமே..
அடுத்து ஹ
ஃக, … இப்படி தாரளம் பயன்படுத்தலாமே.
இங்கு சிலர் வடமொழி எழுத்து வேண்டாம் ஆனால் அதன் உச்சரிப்பு மட்டும் வேண்டுமா என கேட்கலாம். இந்த உச்சரிப்புகள் எல்லாம் ஏற்கனவே தமிழில் உள்ளது. உதாரணமாக க என்ற வல்லின எழுத்து எல்லா இடங்களிலும் வலிந்தே ஒலிப்பதில்லை. அதனுடன் சேரும் இன எழுத்து, குற்றிய லுகரம் போன்ற இடங்களில் வலிந்தும் மெலிந்தும் திரிந்தும் ஒலிக்கும். அதுபோன்றே தமிழின் எல்லா எழுத்துக்களும் எந்த உச்சரிப்புக்கும் உட்படும்.
இந்த உச்சரிப்புகளுக்கு எல்லாம் இலக்கணம் படித்துவிட்டு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரணமாக எழுத்து கூட்டி வாசிக்கும் போதே இவை ஒலித்துவிடும். ஒத்த உச்சரிப்புகளுக்கு தனித்தனி எழுத்துக்கள் இல்லாமல் எல்லாவற்றிற்கும் பொருந்தும் ஒரு எழுத்தை கொண்டிருப்பது தான் தமிழின் எளிமையும் சிறப்பும்.
வடமொழி எழுத்துக்களுக்கான உச்சரிப்புகள் தமிழ் எழுத்துக்களிலேயே சாத்தியப்படும் போது எதற்காக இன்னும் தமிழை கடன்வாங்கி மொழியாகவே வைத்திருக்க வேண்டும்?
தமிழர்கள் சிந்திப்பார்களா?
பழக்கத்தில் இருப்பதை மாற்றுவது கடினம் என எண்ணும் தமிழர்களுக்கு ஒரு நினைவூட்டல். வடமொழி எழுத்துக்களை தமிழில் திணிக்கும்போது நம் முன்னோர் அதை பழக எவ்வளவு கடினப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்று நாமோ அதை எளிதாக பயன்படுத்துகிறோம். அதே போல தான் நாம் இந்த எழுத்துக்களை நீக்க முயற்சிக்கும் போது சிறிறு காலம் கடினப்பட வேண்டி வரும். ஆனால் நமது குழந்தைகள் வடமொழி எழுத்து இல்லாமல் எளிமையாக தமிழை எழுதிவிடுவார்கள்.
கடன்வாங்கி மொழி என்ற இழுக்கும் தமிழைவிட்டு நீங்கும்.
*************************
தமிழீழத்துக்காக ஆயுதம் ஏந்துவோம்.
இங்கு நான் குறிப்பிடும் ஆயுதம் ஆயுத எழுத்து அல்ல. அதன் தத்துவம். ஆயுத எழுத்து வாள், அம்பு போன்று இல்லாமல் கேடயமாக இருப்பது எல்லோரும் அறிந்ததே.
தமிழர்களே உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்போம்? இது ஈழத்தமிழரின் ஓலக்குரல். தமிழர்களை சுட்டுபொசுக்கும் இலங்கை அரசுக்கு எதிராக உங்களை கத்தி கடப்பாரை, பீரங்கி துப்பாக்கி, ஏந்தி போராட அழைக்கவில்லை ஈழத்து அநாதைகள். கேடயம் ஏந்துங்கள் என்று தானே கெஞ்சுகிறார்கள். இந்தியா உட்பட நாடுகள் இலங்கைக்கு வழங்கும் ஆயுத உதவியை தடுத்து நிறுத்தத்தானே கேட்கிறார்கள்.
இந்த ஆயுதத்தை கூட ஏந்த தயார் இல்லை என்றால் தமிழனை போல சுயநலவாதி, மனிததன்மையற்ற மிருகம் உலகில் உண்டா? கார்கில் யுத்தத்திற்கு இந்தியாவில் எந்த மாநிலமும் வாரி வழங்காதபடி 50 கோடி ரூபாயை வாரிவழங்கி வள்ளலாக பெருமைகொண்ட தமிழகமே. இன்று உனது தொப்புள்கொடி உறவுக்காக மட்டும் ஏன் அரசில் நாடகமாடுகிறாய்?
தமிழக அரசு முயன்றால் உலக அரங்கில் தமிழனுக்காக ஒரு ஈழத்தை அமைத்து தரமுடியும். ஆனால் அரசு பித்தலாட்டவாதிகளின் கையில் அல்லவா மாறி மாறி கூப்பாடு போடுகிறது.
எனது நியாயமான கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.
1. இலங்கையில் என்ன நடக்கிறது?
2. ஈழத்தை வைத்து தமிழகத்தில் ஏன் அரசியல் நாடகங்கள்?
3. இலங்கை போன்ற நிலை இந்தியாவில் இருந்தால் தனிநாடு கேட்டு தமிழன் மட்டும் தான் போராடுவானா?
4. ஈழத்துக்கு முடிவு தான் என்ன?
விரிவாகவே கேட்கிறேன்
இலங்கை இறையாண்மை குறித்து முதலைகண்ணீர் வடிக்கும் இந்தியாரை பார்த்து:
1. இலங்கை சட்ட திட்டங்கள் தமிழரை இரண்டாம்பட்ச குடிமக்களாக நடத்துவது உண்மையா இல்லையா?
2. தமிழரை அடிமைகளாகவே வைத்திருக்க தக்க சட்டம் இலங்கையில் உண்டா இல்லையா?
3. தமிழன் ஒருவன் இலங்கையின் உயர்பதவிக்கு வரமுடியுமா?
4. இலங்கையின் இறையாண்மை சரியானது என்றால் அந்த சட்ட திட்டங்களை இந்தியாவில் அமல்படுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா?
அடுத்து கல்நெஞ்சம் கொண்ட தமிழ்நாட்டினரை பார்த்து ஒரு கேள்வி:
1. தமிழை அரசியல் செய்து சீர்குலைத்த அதே மனபான்மையை, குற்றுயிரும் குலையுயிருமாய் உயிர் பிச்சை கேட்டு வரும் ஈழத்து மக்களிடமும் காட்ட வேண்டுமா?
2. அனைத்து கட்சி கூட்டம், ஆர்ப்பாட்டம், ராசினாமா நாடகம், மனிதசங்கிலி இதெல்லாமம் எதற்காக?
3. விடுதலை புலிகளுககு ஆதரவாக பேசினால் சிறை என்றால் உங்கள் உண்மையான மனநிலை தான் என்ன?
4. ஈழத்தமிழர்கள் ஆயுதங்களை தூக்கி எறிந்துவிட்டு இலங்கை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அடிமைகளாக இருக்கவேண்டும் என்பதா? அல்லது விடுதலை புலிகளை தவிர்த்து அறவழியில் இலங்கைக்கு எதிராக தமிழர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்பதா? என்ன தான் ஈழமக்களுக்கு சொல்ல விரும்புகிறீர்கள்? தமிழக அரசியல் மாமேதைகளே ஈழத்துக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை தயவு செய்து, தயவு செய்து அரசியல் நாடகம் ஆடாதீர்கள்.
5. இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான சட்டதிட்டங்களை கொண்டுள்ளது. இந்த இனவெறி சட்டத்தை மாற்ற இந்தியா உட்பட சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் உலகின் 10 கோடி தமிழர்களும் இலங்கைக்கு எதிராக போர் தொடுப்போம் என ஏன் தமிழக அரசால் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற முடியவில்லை?
6. தமிழகத்தை தவிர பிற மாநிலத்தவருக்கு விடுதலை புலிகள் என்றால் காசுமீர் தீவிரவாதிகள் போன்றோர் என்ற எண்ணம் தான் இன்றளவும் இருக்கிறது. இந்தியாவில் காசுமீரை சேர்ந்த ஒருவன் முதலமைச்சராகவும் முடியும், பிரதமராகவும் முடியும், சனாதிபதியாகவும் முடியும், ராணுவ தளபதியாகவும் முடியும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் இலங்கையில் அப்படி இல்லை. தமிழனை அடிமையாகவே வைத்திருக்க சட்டம் வகுக்கப்பட்டுள்ளது என ஏன் இந்திய மக்களுக்கு தமிழனால் புரியவைக்கமுடியவில்லை?
7. 40 பராளுமன்ற உறுப்பினர்கள் ராசினாமா செய்வோம் என பித்தலாட்டம் செய்வதை விட 40 உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி ஈழத்தமிழரின் நிலையை விளக்கி நீதிகேட்க முடியாதா?
8. கார்கில்நிதி, சுனாமி நிதி திரட்டியது போல ஈழத்தமிழுருக்காக இந்திய முழுவதும் பகிரங்கமாக நிதி திரட்ட முடியாதா?
9. இதெற்கெல்லாம் ராசீவ் காந்தி கொலை தடையாக இருக்கிறது என்று வாதிடும் காங்கிரசு மேதாவிகளை பார்த்து ஒரு கேள்வி: இந்திராகாந்தியை தனிப்பட்ட ஒரு சீக்கியர் கொன்றதற்காக 1500 சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக கேட்டேன். ஓரளவு திருப்தியடைந்தவர்கள் பரிகாரமாக கொலையாளியின் மனைவிக்கு பாராளுமன்ற பதவி கொடுத்தார்களாம். அதே போல ராசிவ் கொலைக்காக 2 லட்சம் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் வரை வாயமூடி இருந்துவிட்டோம். இன்னும் 10 கோடி தமிழர்களையும் கொன்று குவித்தால் தான் உங்களுக்கு திருப்தி கிடைக்குமா? ராசீவ் கொலை நிச்சயமாக வன்மையாக கண்டிக்க தக்கது தான். அதற்காக ஈழத்தமிழர் படுகொலையையும் விடுதலைபுலிகளையும் பற்றி பேசவே கூடாது என்றால் இது எந்தவகையான சனநாயகம்?
10. தமிழர்களே தமிழின தலைவன் வேலுபிள்ளை பிரபாகரனா, கருணாநிதியா எனபது அல்ல நம்முன் இருக்கும் கேள்வி. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வீரதீர வரலாறு கொன்ட தமிழினம் அடிமைபட்டே கிடக்கவேண்டுமா? என்பது தான் நம்முன் இருக்கும் அவலம். தமிழினத் தலைவராக அகத்தியரும், தொல்காப்பியரும், திருவள்ளுவரும் உலகெங்கும் கம்பீரமாய் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். அதை நிலைநாட்ட நமக்கு தேவை அரசியல் சூழ்ச்சிகள் இல்லாத ஒற்றுமை. அடிமை எண்ணங்கள் இல்லாத சுதந்திர மனபான்மை.
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும். உலகன் 10 கோடி தமிழர்களே தாய்மொழிக்காகவும் தாய் மண்ணுக்காகவும் தயங்காமல் ஏந்துங்கள் ஆயுதத்தை கேடயமாக. அறப்போரை பகிரங்கமாக அறிவியுங்கள் இலங்கைக்கு எதிராக.
அன்புள்ள குழலி,
கீழ்க்காணும் உங்கள் புதிய தமிழ் “ஒலி இலக்கணம்” ஒரே இஃகு (ஃ) அவியலாகவும், மீண்டும் உச்சரிப்புக் குழம்பமாகவும் ஆகியிருக்கிறதே. யாரிதைத் தமிழகத்தில் ஏற்றுக் கொள்வார் ?
ஒலிக்காகத் தமிழ் இலக்கணம் மாற வேண்டும் என்று இப்படிக் காட்டுகிறீர்களா ? திடீரென இப்படி ஏன் மாறிவிட்டீர்கள் ? !!! உங்கள் புது ஒலி இலக்கணத்தைப் பிறர் ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்கிறீர்களா ?
ஒலி இலக்கணமே தேவையில்லை என்று “கிச்சு போசான்” போன்றவை செவிக்கினிமை என்பதாய் எழுதிப் பக்கம் பக்கமாகப் படையெடுத்து இப்போது எதிராளிகள் கட்சியில் சேர வந்து விட்டீர்களே ! நல்ல முன்னேற்றம்தான் !
++++++++++++++++++
//இன்று சிலர் கட்டாயம் தேவைப்படுவதாக கூறும் நான்கு உச்சரிப்புகளுக்கான தமிழ் எழுத்தை பார்க்கலாம்.
ச-ஸ, சா-ஸா, சி-ஸி, சீ-ஸீ, சு-ஸ§, சூ-ஸ¨, செ-ஸெ, சே- ஸே, சை-ஸை, சொ-ஸொ, சோ-ஸோ, சௌ-ஸெள, ஃச்-ஸ்
இந்த வரிசையில் ஸ் என்ற எழுத்தை தவிர பிற எழுத்துக்கள் எல்லாம் ஒரே உச்சரிப்பை தருகிறது. ச்(ஸ்) என்ற மெய் உச்சரிப்பு ஆயுதத்துடன் சேரும் போது ஃச், ஃசு என்பது சாத்தியப்படுகிறது.//
//உதாரணமாக: ஃபோட்டான் என்பதை க்போட்டான் என நாம் வாசிப்பதில்லை. அதாவது பகரத்தின் மெல்லொலியை (fa.) உச்சரிக்கிறோம். அதே போல ஃசிடாலின், ஃசிட்ரான்சியம், என தெளிவாகவே உச்சரிக்கலாமே.
அடுத்து ஷ
ஷ-ஃச, ஷா-ஃசா, ஷி-ஃசி, ஷீ-ஃசீ, ஷ§-ஃசு, ஷ¨ – ஃசூ, ஷெ-ஃசெ, ஷே-ஃசே, ஷை-ஃசை, ஷொ-ஃசொ, ஷோ-ஃசோ, ஷைள-ஃசௌ, ஷ்-ஃச்//
//அடுத்து ஜ
இந்த உச்சரிப்புக்கு பதிலாக ச என்ற நேரடி உச்சரிப்பையே பயன்படுத்திவருகிறோம்.
இல்லை ஜ உச்சரிப்பு தான் வேண்டும் என பிடிவாதம் பிடிப்பவர்கள் ஞ்+ச பயன்படுத்தலாமே
ஞ்சா, ஞ்சி, ஞ்சூ, ஞ்செ என பயன்படுத்தலாமே..
அடுத்து ஹ
ஃக, … இப்படி தாரளம் பயன்படுத்தலாமே.//
++++++++++++++++++
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
அன்புள்ள குழலி,
//இன்று சிலர் கட்டாயம் தேவைப்படுவதாக கூறும் நான்கு உச்சரிப்புகளுக்கான தமிழ் எழுத்தை பார்க்கலாம்.
ச-ஸ, சா-ஸா, சி-ஸி, சீ-ஸீ, சு-ஸ§, சூ-ஸ¨, செ-ஸெ, சே- ஸே, சை-ஸை, சொ-ஸொ, சோ-ஸோ, சௌ-ஸெள, ஃச்-ஸ்
இந்த வரிசையில் ஸ் என்ற எழுத்தை தவிர பிற எழுத்துக்கள் எல்லாம் ஒரே உச்சரிப்பை தருகிறது. ச்(ஸ்) என்ற மெய் உச்சரிப்பு ஆயுதத்துடன் சேரும் போது ஃச், ஃசு என்பது சாத்தியப்படுகிறது.//
+++++++++
க,ச,ட,த,ப,ற என்பவை ஒலி ஓசையில் வல்லினம். வல்லினச் எந்த இலக்கணப்படி மெல்லின ஆகும் ?
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
அன்புள்ள குழலி,
//தமிழுக்கு திறன் இல்லை என்ற சொல்லும், தமிழீழக் கொடூரங்களை கேட்க நாதியில்லை என்ற உண்மையும் சென்ற வாரங்களில் என்னை வெகுவாக பாதித்த விடயங்கள்
இந்த இரண்டு அநீதிகளுக்காகவும் ஆயுதம் ஏந்தி போராட தமிழர்களை தயார் செய்வது தான் இந்த பதிவின் நோக்கம்.//
ஈதோ மீண்டும் தமிழ்க் காவல்துறை வீராங்கனையாக ஆயுதத்துடன் தாக்க நீங்கள் கிளம்பி விட்டது அறிந்து வியப்படைகிறேன். தர்க்கமிடத் தெரியாவர் ஒன்று எதிராளியைத் திட்டுகிறார் ! அல்லது தடியால் அடிக்க ஆயுத்தமாகிறார்.
பிளாஸ்டிக் குண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு இந்த 2000 நூற்றாண்டு யுகம் பிறந்திருக்கிறது. தமிழ் மொழிக்காக ஆயுதப் போர் துவங்கிய முதல் மாது “குழலி” என்று உங்கள் பெயர் 2008 கின்னஸ் உலகப் பதிவு நூலில் (Guinness World Record 2008) வரப் போகிறது.
இப்படி யெல்லாம் எதிராளிகளைப் பயமுறுத்த எங்கு பயிற்சி பெற்றீர்கள் ? கண்டதற்கெல்லாம் தண்டத்தைத் தூக்கும் பெண்டிரும் இருக்கிறார் என்று எடுத்துக் காட்டுகிறீர்கள் ! உங்கள் ஆக்க பூர்வமான ஆயுதப் போருக்குப் பாராட்டுகள்.
பயன்படுத்தும் ஆயுதங்கள் என்ன என்று முன்பே நீங்கள் சொன்னால் அதற்கேற்றவாறு எதிராளிகள் தற்காப்புக் கேடயம் தயாரிக்கலாம்.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
ப்ரகிலுப்தத்துக்கு தமிழை மாற்ற உரிமை இல்லை என்று ஆதங்கப்பட்டுவிட்டு நீங்கள் தமிழை மாற்ற முயற்சிக்கிறீர்கள்.
) கருத்துகளை கருத்துகளாக பார்த்து வாதிடுவது ரொம்ப நல்ல விஷயம், அடுத்தவர்கள் கருத்துகளை சீர் தூக்கிப் பார்த்து பேசும் உங்கள் “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்” மன நிலையை பாராட்டுகிறேன்.
தமிழ் எழுத்துகளை இந்த கம்ப்யூட்டர் யுகத்துக்கு தக்கவாறு மாறுவது நல்லதுதான். ஒலி வடிவங்களை எப்படி efficient ஆக வரி வடிவங்களாக மாற்றுவது என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றுதான். உதாரணமாக எனக்கு இந்த தந்நகரம், றன்னகரம் என்ற இரண்டு வடிவங்கள் ஏன் என்று புரிவதில்லை. ஒன்றை நாம் மறந்துவிட்டால் 247, 235 ஆகிவிடும்.
பொதுவாக இருக்கும் வரி வடிவங்களை விட்டுவிட்டு ஆயுத எழுத்தை பயன்படுத்துவது அனாவசிய குழப்பம் என்பது என் கருத்து. ஆனால் பெரியாரின் மாற்றங்களும் வந்த போது குழப்பினாலும் இப்போது பழகிவிட்டது. தமிழ் மற்றும் கணினி அறிஞர்கள் சொன்னால் ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். முன் சொன்னாற்போல் தமிழ் உங்கள் பாட்டன் வீட்டு சொத்தும் கூடத்தான், அதனால் இப்படி சொல்ல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. இது unicode efficiencyஐ அதிகரிக்கிறது என்றால் சரிதான்…
தமிழ் ஈழத்தை பற்றி சொல்லி இருந்தீர்கள். ஈழத் தமிழர்கள் வேறு, புலிகள் வேறு என்று நினைப்பவன் நான். புலிகளுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என்று ராஜீவ் காந்தி கொலைக்கு முன்னாலேயே நண்பர்களிடம் வாதிடுவேன். ௮௬இல் புலிகள் சிரிசபாரத்தினத்தை கொன்றதும் எடுத்த நிலை அது. அதை மாற்ற எந்த காரணமும் இது வரை இல்லை.
பகத் சிங் காந்தியை கொன்றிருந்தால் பகத் சிங்கை இன்று யாரும் கொண்டாட மாட்டார்கள். பிரபாகரன் ஒரு பிடி மண் மிஞ்சினாலும் சரி, அங்கே நான் ராஜாவாக இருந்தால் போதும் என்று நினைப்பவர்.
அதற்காக புலிகளுக்கு ஆதரவாக பேசினால் சிறை என்பது முட்டாள்தனம் என்று நினைக்கிறேன். தனி தமிழ் நாடு வேண்டும் என்று சொன்னால் அது இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு; புலிகளுக்கு ஆதரவு என்றால் நலிநிக்காக வாதாடிய வக்கீலும் ஜெயிலுக்கு போக வேண்டி வரும்!
இது முள்ளில் விழுந்த சேலை – புலிகள் இல்லாமல் இன்று இலங்கையில் தமிழர்கள் இல்லை என்ற நிலையை இருக்கும் அத்தனை தலைவர்களையும் கொன்றே புலிகள் உருவாக்கிவிட்டார்கள். இதை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியவில்லை. வரும் அகதிகளை நல்ல வழியில் பார்த்துக்கொள்வது, ரெட் கிராஸ் போன்ற நிறுவனங்களை தடை இல்லாமல் யாழ்ப்பாணத்துக்கு அனுப்புவது, தமிழ் நாட்டில் ஊடுருவும் புலிகளையும், அவர்களுக்காக பேச மட்டும் செய்யாமல் உதவியும் செய்பவர்களையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவது இவ்வளவுதான் எனக்கு தெரிகிறது.
நீங்களும் சீக்கியர்கள் வாதத்தை பயன்படுத்தி இருப்பதை கவனிக்கவில்லை – இதை பற்றிய என்னுடைய போஸ்ட் http://koottanchoru.wordpress.com/2008/10/27/புரியாத-புதிர்/
மதிப்பிற்குறிய திரு. செயபாரதன் ஐயாவுக்கு..
//விடுதலைப் போரில் 20% நபர்கள்தான் பங்கெடுத்தார் என்பதற்குச் சான்றுகள் உள்ளனவா ? என்னுடைய கணக்குப்படிச் சுமார் 80% மேல் என்பது. 20% நபர்கள் மட்டும் போரிட்டு ஒரு போதும் தேசம் விடுதலை அடைந்திருக்க முடியாது.//
//பொதுமக்களுக்கு தனி சுதந்தரத்தை புரியவைத்து //
இந்த வார்த்தை உங்கள் கண்ணில் படவில்லையா?
எந்த கருத்தையும் முழுமையாக உள்வாங்கி கொள்ளாமல் தாங்கள் இப்படி கேள்விகளை எழுப்புவது வியப்பாகவே இருக்கிறது. அறிதல், ஆய்தல், முனைதல், அறிவித்தல் இது தான் ஒரு சிறந்த அறிவியலாளருக்கு அழகு. எனது எல்லா கருத்துக்களையும் அரைகுறையாக படித்துவிட்டு கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.
***********************
//தமிழ் நாட்டில் பெரியாரின் சுயமரியாதைக் கும்பல் போன்ற துரோகக் குழுக்கள்தான் (20% சதவீதம்) பிரிட்டீஷ்காரன் இந்தியாவை விட்டுப் போகக் கூடாது, நாட்டுக்கு விடுதலை தேவையில்லை என்று ஒதுங்கி யிருந்தவர்கள். பிறகு விடுதலை கிடைத்ததும் திராவிட நாட்டுப் பிரிவினைக்கு அடிபோட்டு ஏமாந்தவர்கள் !!!
பெரியார் தமிழைக் காட்டுமிராண்டிகளின் மொழி என்றவர். திருக்குறளை அந்தணர் நூல் என்று வெறுத்தவர். கம்ப இராமாயணக் காவியத்தைத் தீயில் இட்டவர். //
பெரியார் சீர்திருத்தத்தை பற்றி திரு. R.V கேட்ட கேள்விக்கு பதிலளித்திருந்தேன். பெரியார் பற்றி நான் மிகைபடுத்தவும் இல்லை. குறைகூறவும் இல்லை.
ஆனால் பெரியார் என்ற பெயரை கேட்டவுடனே உங்களுக்கு ஏன் இவ்வளவு கடுப்பு?
பெரியார் என்ற மாமனிதரால் தென்னிந்தியாவில் ஒரு சமூக மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அப்படி இருக்கும் போது துரோக குழுக்கள் என்கிறீர்களே. என்னை நாகாக்க சொன்ன தாங்கள் நாகாக்காமல் போனது ஏனோ? அவசரத்தில் எழுதிவிட்டீர்களோ?
//இலக்கண அகத்தியராக ஆக்கிப் பெரியாரைத் தமிழ்ப் பண்டிராக மாற்ற முயலாதீர்கள்.//
நான் ஒன்றும் அப்படி முயலவில்லை. நீங்கள் தன் பெரியார் மீது உள்ள கோபத்தில் ஏதோ தடுமாறி இருக்கிறீர்கள்.
***********************
//இசைவாணி சுசீலா கர்நாடக, தியாராஜ கீர்த்தனைகளுக்குத் தமிழில் பாடத் தேவைப்படும் மெல்லோசை ஒலியைப் பற்றி எங்கே பதில் கூறுகிறார் ? என் கேள்வி என்ன ? உங்கள் பதில் மையத்தை விட்டு சுற்றி வளைத்து எங்கோ போகிறது !!! //
கேள்வியும் அதிலிருக்கிறது. பதிலும் அதிலேயே தெளிவாக இருக்கிறது. புரிந்துகொள்ளும் திறன் தான் தங்களிடம் இல்லை என்று நினைக்கிறேன்.
//உச்சரிப்பு தான் முக்கியம். அந்ததந்த மொழிகளில் அந்தந்த உச்சரிப்புகளோடு பாடும்போது தான் அந்த வார்த்தைகளுக்கு உயிர் இருக்கிறது. இனிமையும் வலிமையும் கூடுகிறது.//
அந்தந்த மொழிகளில் அந்தந்த உச்சரிப்பில தான் இனிமை இருக்கிறது என்பதை கவனிக்கவில்லையா?
*******************
75 வயதாகும் நான் 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப தமிழை வளைத்து எளிதாகப் புரியும்படிப் புதுத்தமிழில் 45 ஆண்டு காலமாய் எழுதி வருகிறேன். நான் புதுமைவாதி. இளவயதான (உங்கள் வயது என்ன்வோ ?) நீங்கள்தான் மாறாமல் பழைய தமிழைப் பிடித்துக் கொண்டு பழமைவாதியாகக் காட்டிக் கொள்கிறீர்கள்.
நீங்கள் பயன்படுத்தும் தமிழை புதுதமிழ் என்று நீங்கள் ஒருவர் தான் சொல்லிக்கொள்ள வேண்டும். இரசாயணம், பௌதீகம், பூகோளம், அகிலவலை, பாரதகண்டம், என்பதெல்லாம் எப்போதோ மலையேறி விட்டது. வேதியல், இயற்பியல், புவியியல், இந்தியநாடு, இணையம் என்ற எளிய தமிழ் உங்களுக்கு மட்டும் பழையதமிழாக படுவது ஆச்சரியமாக இருக்கிறது.
*********************
//ஒலி இலக்கணமே தேவையில்லை என்று “கிச்சு போசான்” போன்றவை செவிக்கினிமை என்பதாய் எழுதிப் பக்கம் பக்கமாகப் படையெடுத்து இப்போது எதிராளிகள் கட்சியில் சேர வந்து விட்டீர்களே ! நல்ல முன்னேற்றம்தான் ! //
ஒலிஇலக்கணம் தேவையில்லை என நான் எங்கே சொன்னேன்? கிச்சு போசான் அல்ல. கிக்சு போசான். அரைகுறையாக படித்துவிட்டு இப்படி அரைகுறையாக எழுதுவுதால் தான் தமிழ் உங்களுக்கு கொச்சையாக பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். முதலில் இரண்டு மூன்று முறை தங்கள் எழுதியபோது எழுத்துபிழை என்றே எண்ணினேன். ஆனால் தொடர்நது கிச்சு என்றே எழுதுகிறீர்கள். தெரிந்து எழுதுகிறீர்களா? தெரியாமல் எழுதுகிறீர்களா என தெரியவில்லை?
செயபாரதன் ஐயா
தமிழழில் மெல்லோசை இல்லை என்ற தங்களின் குறைபாடு நீங்கவேண்டும் என்பதற்காக தான் ஆயுத எழுத்தை பயன்படுத்த சொல்லியிருக்கிறேன். ஆயுத எழுத்து பயன்படுத்தும் போது எந்திவித ஒலியும் வருகிறது அல்லவா? அப்படி இருக்க எப்படி தமிழில் திறன் இல்லை என்று சொல்லலாம்? தமிழிலேயே எழுத்து இருக்கும்போது எதற்காக வடமொழி எழுத்தை பயன்படுத்த வேண்டும். தமிழ் எழுத்து தேவையில்லை வடமொழி எழுத்து தான் வேண்டும் என்பதற்கு உண்மையான நோக்கம் என்ன? வடமொழி எழுத்தை வாழவைத்து தமிழை சீர்குலைப்பது என்பது தானே.
******************
//க,ச,ட,த,ப,ற என்பவை ஒலி ஓசையில் வல்லினம். வல்லினச் எந்த இலக்கணப்படி மெல்லின ஆகும் ?//
ஆயுத எழுத்தை சேர்த்து உச்சரித்து பாருங்கள்.
********************
//ஈதோ மீண்டும் தமிழ்க் காவல்துறை வீராங்கனையாக ஆயுதத்துடன் தாக்க நீங்கள் கிளம்பி விட்டது அறிந்து வியப்படைகிறேன். தர்க்கமிடத் தெரியாவர் ஒன்று எதிராளியைத் திட்டுகிறார் ! அல்லது தடியால் அடிக்க ஆயுத்தமாகிறார்.
பிளாஸ்டிக் குண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு இந்த 2000 நூற்றாண்டு யுகம் பிறந்திருக்கிறது. தமிழ் மொழிக்காக ஆயுதப் போர் துவங்கிய முதல் மாது “குழலி” என்று உங்கள் பெயர் 2008 கின்னஸ் உலகப் பதிவு நூலில் (நிuவீஸீஸீமீss கீஷீக்ஷீறீபீ ஸிமீநீஷீக்ஷீபீ 2008) வரப் போகிறத//
மேற்சொன்ன அதே பதில் தான். கட்டுரையை மீண்டும் தெளிவாக படியுங்கள். தமிழீழத்துக்காக தான் ஆயுத எழுத்து தத்துவத்தில் ஆயுதம் ஏந்த சொல்லியிருக்கிறேன். தமிழுக்காக ஆயுத எழுத்தை தான் ஏந்த சொல்லியிக்கிறேன். ஆயுத எழுத்தை பயனபடுத்துவதற்கெல்லாம் கின்னசு புத்தகத்தில் இடம் கிடைக்கும் என்றால் உங்கள் சிபாரிசுக்கு மிக்க நன்றி.
//இப்படி யெல்லாம் எதிராளிகளைப் பயமுறுத்த எங்கு பயிற்சி பெற்றீர்கள் ? கண்டதற்கெல்லாம் தண்டத்தைத் தூக்கும் பெண்டிரும் இருக்கிறார் என்று எடுத்துக் காட்டுகிறீர்கள் ! உங்கள் ஆக்க பூர்வமான ஆயுதப் போருக்குப் பாராட்டுகள்.//
பாராட்டுக்கு நன்றி., எந்த விதத்தில் பயந்தீர்கள். விளக்கவும்.
*********************
அன்புள்ள குழலி,
//பெரியார் என்ற மாமனிதரால் தென்னிந்தியாவில் ஒரு சமூக மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. அப்படி இருக்கும் போது துரோக குழுக்கள் என்கிறீர்களே. என்னை நாகாக்க சொன்ன தாங்கள் நாகாக்காமல் போனது ஏனோ? அவசரத்தில் எழுதிவிட்டீர்களோ?//
பெரியார் சமூகச் சீர்த்திருத்தம் என்ற போர்வையில் தமிழருக்குள் அந்தணர், அந்தணரற்ற இனவெறியைக் கிளப்பிச் சண்டையை மூட்டிப் பிரித்தவர். அகஸ்தியர், பாரதியார், நோபெல் பரிசு பெற்ற ஸர். சி.பி ராமன், கணிதமேதை ராமானுஜன், நோபெல் பரிசு பெற்ற சந்திரசேகர் ராஜாஜி, பரிதிமாற் கலைஞன், கல்கி கிருஷ்ணமூர்த்தி, சிவகாமி, ஜோதிர்லதா கிரிஜா, சுகாஸினி, கமல ஹாஸன், தமிழ்ப்பெண் விஞ்ஞானி பிரியவதா நடராஜன் இவர்கள் எல்லாரும் தமிழரில்லையா ?
‘துரோகிகள்” என்றால் அன்னியனுக்குத் தேசத்தைக் காட்டிக் கொடுபவர்,
தேசத்தை விற்பவர் என்று பொருள். இந்திய தேச விடுதலை நாளைத் “துக்க தினமாகக்” கொண்டாடிய பெரியாரை அவரது பிரதான சீடர்கள் பலர் அண்ணாத்துரை தலைமையில் தனியாக விட்டுவிட்டுப் போய் விட்டார்களே !!!
சி. ஜெயபாரதன்
அன்புள்ள குழலி
உங்கள் கட்டுரைத் தலைப்பிது !!!
//”தமிழுக்காக, தமிழீழத்துக்காக ஆயுதம் ஏந்துங்கள்” //
//கட்டுரையை மீண்டும் தெளிவாக படியுங்கள். தமிழீழத்துக்காக தான் ஆயுத எழுத்து தத்துவத்தில் ஆயுதம் ஏந்த சொல்லியிருக்கிறேன். தமிழுக்காக ஆயுத எழுத்தை தான் ஏந்த சொல்லியிக்கிறேன்.//
தமிழுக்காக ஆயுதம் ஏந்தச் சொல்ல வில்லை ஏன் பின்வாங்குகிறீர்கள் ?
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
அன்புள்ள குழலி,
//நீங்கள் பயன்படுத்தும் தமிழை புதுதமிழ் என்று நீங்கள் ஒருவர் தான் சொல்லிக்கொள்ள வேண்டும். இரசாயணம், பௌதீகம், பூகோளம், அகிலவலை, பாரதகண்டம், என்பதெல்லாம் எப்போதோ மலையேறி விட்டது. வேதியல், இயற்பியல், புவியியல், இந்தியநாடு, இணையம் என்ற எளிய தமிழ் உங்களுக்கு மட்டும் பழையதமிழாக படுவது ஆச்சரியமாக இருக்கிறது.//
திண்ணையில் வந்துள்ள எனது விஞ்ஞானக் கட்டுரைகளையும், என்னுடைய வலைத் தளத்திலும் உள்ள கட்டுரைகளுக்கு வந்துள்ள நூற்றுக்கணக்கான வரவேற்புகளைப் பாருங்கள்.
உங்கள் தனித்தமிழில் எங்கெல்லாம் விஞ்ஞானக் கட்டுரைகள் வருகின்றன ? எத்தனை கட்டுரைகள் வந்துள்ளன என்று காட்டுங்கள் ?
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
திண்ணையில் [ http://www.thinnai.com ] “அறிவியல்” தலைப்பின் கீழ் வந்துள்ள பற்பலப் புதுத்தமிழ்க் கட்டுரைகளைப் பாருங்கள்.
சி. ஜெயபாரதன்.
அன்புள்ள குழலி,
//பூகோளம், அகிலவலை, பாரதகண்டம், என்பதெல்லாம் எப்போதோ மலையேறி விட்டது. //
நீங்கள் பாரத கண்டத்தில் இல்லாமல் எங்கே வாசம் செய்கிறீர்கள் ?
http://en.wikipedia.org/wiki/India [ விக்கிபீடியாவில் பாருங்கள் இந்தியாவுக்கு மறுபெயர் "பாரத நாடு" என்று பெயர் இருப்பதை ]
பூகோளம் என்றால் Globe. புவி என்றால் Earth. அண்ட கோளங்கள், பூமி, பூமாதேவி என்றால் அவை தமிழ்ச் சொற்கள் இல்லையா ? புவி என்பது பூகோளம் ஆகாது. புவிவேறு. பூகோளம் வேறு.
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழில் ஒழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் “பரத கண்டமதில்”
தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும்
இந்தப் பாடலை மறந்து விட்டீர்கள். நினைவூட்டிக் கொள்ளவும்.
சி. ஜெயபாரதன்
அன்புள்ள குழலி,
//இன்று சிலர் கட்டாயம் தேவைப்படுவதாக கூறும் நான்கு உச்சரிப்புகளுக்கான தமிழ் எழுத்தை பார்க்கலாம்.
ச-ஸ, சா-ஸா, சி-ஸி, சீ-ஸீ, சு-ஸ§, சூ-ஸ¨, செ-ஸெ, சே- ஸே, சை-ஸை, சொ-ஸொ, சோ-ஸோ, சௌ-ஸெள, ஃச்-ஸ்
இந்த வரிசையில் ஸ் என்ற எழுத்தை தவிர பிற எழுத்துக்கள் எல்லாம் ஒரே உச்சரிப்பை தருகிறது. ச்(ஸ்) என்ற மெய் உச்சரிப்பு ஆயுதத்துடன் சேரும் போது ஃச், ஃசு என்பது சாத்தியப்படுகிறது.
ஸ் என்ற எழுத்தை தவிர நாம் பிறதை பயன்படுத்துவதில்லை.
உதாரணத்துக்கு காங்கிரஸ் என எழுத்தும்போது தான் ஸ் பயன்படுத்துகிறோம். காங்கிரசார், காங்கிரசிடம், காங்கிரசுடன், என்று தான் பயன்படுத்துகிறோம்.
ஒரு ஒலிக்காக தனி ஒரு எழுத்துவரியையே ஏற்பதற்கு பதிலாக ஸ் – ஃசு என்று ஆயுதத்தை பயன்படுத்தலாமே.
ஃ இதற்கு க் என்பதல்ல ஒலி. எந்த எழுத்துடன் சேருகிறதோ அங்கு அந்த எழுத்தை மெல்லெலுத்தாக மாற்றி ஒலிக்கசெய்வது.
உதாரணமாக: ஃபோட்டான் என்பதை க்போட்டான் என நாம் வாசிப்பதில்லை. அதாவது பகரத்தின் மெல்லொலியை (fa.) உச்சரிக்கிறோம். அதே போல ஃசிடாலின், ஃசிட்ரான்சியம், என தெளிவாகவே உச்சரிக்கலாமே.
அடுத்து ஷ
ஷ-ஃச, ஷா-ஃசா, ஷி-ஃசி, ஷீ-ஃசீ, ஷ§-ஃசு, ஷ¨ – ஃசூ, ஷெ-ஃசெ, ஷே-ஃசே, ஷை-ஃசை, ஷொ-ஃசொ, ஷோ-ஃசோ, ஷைள-ஃசௌ, ஷ்-ஃச்
எல்லா உச்சரிப்பும் எளிதாகவே வருகிறதல்லவா? மேலும் ஷ என்ற உச்சரிப்பு மொழிக்கு இடையிலும் இறுதியிலும் வரும்போது ட வாக தமிழில் பயன்படுத்தி வருகிறோம். அதை அப்படியே எடுத்துக்கொள்ளலாம். எ.கா: இலட்சுமி, நட்டம், விடம்.
அடுத்து ஜ
இந்த உச்சரிப்புக்கு பதிலாக ச என்ற நேரடி உச்சரிப்பையே பயன்படுத்திவருகிறோம்.
இல்லை ஜ உச்சரிப்பு தான் வேண்டும் என பிடிவாதம் பிடிப்பவர்கள் ஞ்+ச பயன்படுத்தலாமே
ஞ்சா, ஞ்சி, ஞ்சூ, ஞ்செ என பயன்படுத்தலாமே..//
+++++++++++++++++++++
இந்த புது குழலி தமிழ் இலக்கணப்படி
என் பெயர் ஜெயபாரதனை எப்படி எழுதுவது ? ஜவஹர்லால் நேரு என்று எப்படி எழுதுவது ?
ஜெ வுக்கு “ஞ்செயபாரதன்” என்று எழுதுவதா ? ஜவஹருக்கு “ஞ்சவகர்” என்று எழுதவா ?
ரோஜாவுக்கு “ரோஞ்சா” என்று எழுதுவதா ?
ஷேக்ஸ்பியர் என்பதை “ஃசேக்சுபியர்” என்று எழுதுவதா ?
கிரந்த எழுத்துக்கள் மூலம் அழகாக எழுத வேண்டிய பெயர்களை இப்படிக் கோமாளிகள் பெயர்கள் போல் எழுதிக் காட்டுங்கள்.
மற்ற இந்திய மொழிகளில் அனைத்திலும் குழந்தைகளும் பெரியவரும் உலக மேடைகளில் சரியாக உச்சரித்து உரையாற்றும் போது தமிழ் மாந்தர் மட்டும் இப்படிக் கோமாளித்தனமாகத் தமிழில் எழுதியும் பேசியும் வருவது கற்காலப் பிற்போக்குத்தனமே தவிர தற்கால முற்போக்குடமை ஆகாது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
நண்பர்களே
உங்கள் பார்வைக்கு
1. http://www.veeran.co.cc/2008/10/blog-post_16.html
2. http://www.tamilhindu.com/
சி. ஜெயபாரதன், கனடா